திருவள்ளூர், பிப்.4- திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகர் பகுதியில் உள்ள இ.பி காலனி செல்லும் பாதையில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. தனியாருக்கு சொந்த மான ஏஞ்சல் பள்ளியிலி ருந்து வரும் கழிவு நீர் சாலை யில் தேங்குவதாகக் கூறப்படு கிறது. இந்த வழியாகத்தான் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அப்படி செல்லும் போது கழிவுநீர் உடலில் படுவதால் அவர்களுக்கு அரிப்பு ஏற்படுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாலையிலிருந்து கழிவுநீரை அகற்ற முறை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாதர், வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல முறை திருநின்றவூர் பேரூராட்சிக்கு மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீரை வெளி யேற்றும் ஏஞ்சல் தனியார் பள்ளியின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வியையும் அப்பகுதி மக்கள் கேட்கின்றனர். சாலையில் தேங்கி யுள்ள கழிவுநீரை அகற்றி சுகாதாரம் காக்க வேண்டும், மேலும் ஏஞ்சல் பள்ளிக்கூடம் ரயில்வே இருப்பு பாதைக்கு மிக அருகில் உள்ளது. எனவே சட்ட விதிமுறை களுக்கு மாறாக கட்டப்பட்ட ஏஞ்சல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என மாதர் சங்கத்தின் திருநின்றவூர் பகுதிச் செயலாளர் எம்.பௌர்ணமி கேட்டுக் கொண்டுள்ளார்.